‘100 நாட்களில் தவெக அரசுக்கு பூஜ்ஜியம்தான் மதிப்பெண்ணாக வழங்க முடியும். வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும் என்ற கேள்விக்கு கூட பதில் இல்லை. மாற்றம், மாற்றம் என்று சொன்னவர்களின் ஆட்சியில் பெயர் மாற்றம் மட்டுமே நடந்துள்ளது. பள்ளிக்கல்வி, உயர்கல்வித்துறைக்கான நிதி குறைக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்ந்தது. திமுகவின் திட்டங்களில் வெற்றி என தவெக அரசு ஸ்டிக்கர் ஒட்டியுள்ளது’ என தவெக அரசின் முதல் பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கருத்து தெரிவித்துள்ளார்.
