புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் மாத்திரை பற்றாக்குறை நிலவுவதாக நோயாளிகள் புகார் அளித்துள்ளனர். சிகிச்சை முடிந்தாலும், மாத்திரைகளை வாங்க நீண்ட வரிசையில் காத்திருப்பதாக நோயாளிகள் தெரிவித்துள்ளனர். அத்தியாவசிய மருந்து, மாத்திரைகளை இருப்பு வைக்க வேண்டும் என நோயாளிகள் வலியுத்தியுள்ளனர். போதிய அளவில் மருந்தாளுநர்களை நியமித்து நோயாளிகள் காத்திருக்கும் நிலையை சரி செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை அரசு மருத்துமவனையில் மாத்திரை பற்றாக்குறை…நோயாளிகள் அவதி
