பழனி முருகன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆடி கிருத்திகையை ஒட்டி பழனி கோயிலில் ஆயிரக்கணக்கானோர் தரிசனத்திற்காக குவிந்த நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பயணிகளின் உடமைகள் தீவிரமாக பரிசோதிக்கப்பட்டு வருகிறது. மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தியதால் பக்தர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
