திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் ‘கிரைண்டர்’ ஓரினச்சேர்க்கை செயலி மூலம் பழகிய ஆடிட்டர் ஒருவரை ஆள்நடமாட்டமில்லாத காலி இடத்திற்கு வரவழைத்து தாக்கி, பணம் பறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் ஈடுபட்ட அருண்குமார், விஷ்ணு சுப்பு மற்றும் பூபதி ராஜா ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை பிடிக்கப் போலிசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
