உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பல்லவி சிங் ராஜ்புத் என்ற பெண், டேட்டிங் செயலிகள் மூலம் ஆண்களுடன் பழகி, அந்தரங்கப் படங்களை வைத்து மிரட்டி ரூ.6 கோடி வரை பணம் பறித்துள்ளார். மிரட்டலுக்குப் பணியாதவர்கள் மீது பொய் வழக்குப் பதிவு செய்து 5 பேரைச் சிறையிலும் அடைத்துள்ளார். அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள பல்லவி சிங் மற்றும் அவருக்கு உதவிய நபர்களைத் தேடி வருகின்றனர்.
