தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை கர்நாடக அரசு உடனடியாக திறந்துவிட உத்தரவிட கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை ஆக.13-ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது. டெல்டா மாவட்டங்களின் விவசாய தேவைகள் மற்றும் பாசனத்தை கருத்தில் கொண்டு, உரிய நீர் பங்கீட்டை உறுதிசெய்யக் கோரி தமிழ்நாடு அரசு சார்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
