திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த பச்சாபாளையத்தில் வீட்டிற்குள் புகுந்த இளைஞர் ஒருவர், இளம்பெண் மற்றும் அவரது தாயை வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் செய்ய இளம்பெண் மறுத்ததால் ஆத்திரமடைந்த இளைஞர், காதலியையும் அவரது தாயையும் கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக இளைஞரை கைது செய்த போலீசார், கொலைக்கான காரணம் மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
