நெல்லை வண்ணார்பேட்டை அரசு ஹாஸ்பிடலில் நர்ஸ்ஸிடம் அத்துமீறிய இருவரை போலீஸ் கைது செய்துள்ளது. அசாமைச் சேர்ந்த இரு இளைஞர்கள், தங்களது உறவினரிடம் நலம் விசாரிக்க வந்துள்ளனர். அப்போது, அங்கு பணியில் இருந்த இளம் செவிலியருக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளித்ததாக புகார் அளிக்கப்பட்டது. பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாவதற்கு நெட்டிசன்கள் கொந்தளித்துள்ளனர்.
