தமிழகத்தில் நடத்தப்பட்ட சிறப்பு ஆய்வில் 3.43 லட்சம் இணைப்புகளில் வெறும் 0.75% மட்டுமே கணக்கீட்டு தவறுகள் கண்டறியப்பட்டு சீரமைப்பு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது. கோடை வெயிலின் தாக்கம் காரணமாகவே வீடுகளில் மின் பயன்பாடு அதிகரித்துள்ளதே தவிர, மின்கட்டணம் உயர்த்தப்படவில்லை என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும் 200 யூனிட் இலவச மின் திட்டத்தால் நுகர்வோர்கள் பயனடைந்து வரும் நிலையில், சந்தேகங்களுக்கு 9498794987 என்ற எண் மூலம் தீர்வுகாணலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
