நீட் தேர்வு தொடர்பான விவாதத்துக்கு அரசு தயார் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு அமித் ஷா கடிதம் எழுதியுள்ளார். அவையிலேயே எதிர்க்கட்சியினரின் கேள்விகள், சந்தேகங்களுக்கு பதிலளிக்கத் தயார். ஜனநாயகத்தில் விவாதம், உரையாடல் மூலமே பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும்; அனைவரும் சுதந்திரமாக கருத்தை முன்வைக்க விவாதம் நடத்த ஏற்பாடு செய்ய கோரிக்கை விடுத்துள்ளார்.
