இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 220 திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை நியமிப்பதற்காக விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஆக.28-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஆக.12-ம் தேதியுடன் கால அவகாசம் நிறைவடைய இருந்த நிலையில், அதிகப்படியான தகுதி வாய்ந்த நபர்கள் பங்குபெறும் வகையில் இந்த அறிவிப்பினை இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இணையதளம் வாயிலாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ மண்டல இணை ஆணையர் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கலாம்.
