Gen Z தலைமுறையினர் தங்களது 25 வயதிலேயே கிரெடிட் கார்டு, தனிநபர் கடன் போன்றவற்றை அதிகம் பயன்படுத்துவதாக ரிசர்வ் வங்கி கவலை தெரிவித்து வருகின்றனர். “முதலில் சேமி, பிறகு செலவு செய்” என்ற பழக்கத்துக்குப் பதிலாக, “இப்போது செலவு செய், பின்னர் செலுத்து” என்ற மனநிலை இளம் தலைமுறையினரிடம் அதிகரித்துள்ளது வேதனை அளிக்கிறது. இந்தியாவில் கிரெடிட் கார்டு மூலம் நிலுவையில் உள்ள கடன் கடந்த நிதியாண்டில் ரூ.3 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளதாக ரிசர்வ் வங்கி வேதனை தெரிவித்துள்ளது.
