எடமலைப்பட்டி புதூர் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கிராஃபோர்ட் பகுதியில் உள்ள கல்லறைத் தோட்டம் பகுதியில், ராஜசேகர் என்பவர் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து சோதனை செய்ததில், அவரிடம் புகையிலை பொருட்கள் விற்பனைக்கு இருப்பது கண்டறியப்பட்டது. இதனையெடுத்து போலீசார் ராஜசேகரை கைது செய்து, அவரிடமிருந்து ரூ.250 மதிப்புள்ள புகையிலையை பறிமுதல் செய்தனர்.
