தமிழகத்தில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லையா? என்றும் புகார்கள் இருந்தும் ஒரு உயிரை காப்பாற்ற முடியாதது ஏன்? என்றும் தவாக தலைவர் வேல்முருகன் கேள்வியெழுப்பியுள்ளார். அவரது எக்ஸ் பதிவில், குடியாத்தத்தில் தலைமை பெண் காவலராகப் பணியாற்றிய தாமரைச்செல்வி, கணவர் அரவிந்தனால் கத்தியால் தாக்கப்பட்டு உயிரிழந்திருப்பது பேரதிர்ச்சியளிக்கிறது. குடும்ப வன்முறை புகார்களை சாதாரண குடும்பத் தகராறாக பார்க்காமல், உயிருக்கு ஏற்படக்கூடிய ஆபத்தை மதிப்பிட்டு உடனடிப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
