திருச்சி மாவட்டத்தில் கொலை மிரட்டல், அடிதடி, போக்சோ உள்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய சுப்பிரமணி, முகமது செலர்ஷா, தாமஸ் அந்தோணி, கணபதி, சரவணன், மகேஸ்வரன் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் இவர்கள் மீதான வழக்கு விசாரணைக்கு இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், இந்த 6 பேரையும் கைது செய்யும்படி, பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
