உங்க தலைவரின் பெயரை குறிப்பிட்டு பேசிய விதம் தவறுதான். அவர் சார்பாக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்”-CM விஜய்
சட்டமன்றத்தில் இன்று (ஆக.17) மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய தவெக அமைச்சர் ரஞ்சித்குமார், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பெயரை கூறி வாக்குவாதம் செய்தார். இதற்கு திமுக கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில், முதலமைச்சர் விஜய் பேசுகையில், “தலைவர் பெயரை குறிப்பிட்டதற்கு அவர் சார்பாக நான் மன்னிப்புக் கேட்கிறேன்” என உதயநிதியை பார்த்து கூறினார்.
