இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்திற்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு தடுப்புகளை பாகிஸ்தான் சமீபத்தில் அகற்றியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், புதுடெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் எல்லைக்கு வெளியே அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு தடுப்புகளை மத்திய அரசு தற்போது அகற்றியுள்ளது. தூதரகத்தின் விசா பிரிவுக்கு அருகிலுள்ள சந்தில் விதிகளை மீறி அமைக்கப்பட்டிருந்த வரிசை தடுப்புகள் மற்றும் வாகன நிறுத்த கம்பங்கள் இந்த நடவடிக்கையின் மூலம் அகற்றப்பட்டுள்ளன.
