பாலியல் பலாத்கார வழக்கை மறைக்க லஞ்சம் கேட்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டில் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மானின் மனைவி குர்பிரீத் கவுரிடம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி ரஞ்சித் சிங் அளித்த புகாரில், ஒரு பாலியல் பலாத்கார வழக்கை முடித்து வைக்க ரூ.5 கோடி லஞ்சம் கேட்கப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இதுகுறித்து பஞ்சாப் தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோர் 15 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என ஆணையம் கூறியுள்ளது.
பலாத்கார வழக்கை முடிக்க பஞ்சாப் முதல்வரின் மனைவி ரூ.5 கோடி லஞ்சம்..
