வங்காளதேசத்தில் ஆட்சி கவிழ்ப்புக்கு பிறகு அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகன் சாஜிப் வாசெட் குற்றம்சாட்டியுள்ளார். போலி பாஸ்போர்ட் வழக்கில் கைதான அபு தல்கா என்பவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை தொடர்ந்து, நாட்டில் பயங்கரவாத வலைப்பின்னல்களை தீவிரமாக உருவாக்கி வருவதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார். இதனால் வங்காளதேசம் மற்றொரு பாகிஸ்தானாக மாறிவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.
