கர்நாடகாவின் மாண்டியாவில் மசூதி அருகில் அருகே பிச்சை எடுத்த மூதாட்டி தனது வீட்டில் லட்சக்கணக்கான பணத்தை விட்டு சென்றிருப்பது மறைவுக்கு பிறகு தெரியவந்துள்ளது. நூர்(69) என்ற பெண், வயது முதிர்வு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு பின், வீட்டை சுத்தம் செய்தபோது ரூ.8.40 லட்சம் பணம் இருந்ததை அவரது உறவினர்கள் கண்டெடுத்தனர். பிச்சை எடுத்தாலும் லட்சாதிபதியாக இருந்த நூரின் கதை சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
