புதுக்கோட்டை பழைய அரசு தலைமை மருத்துவமனையில் தொடர் மின்வெட்டால் நோயாளிகள் கடும் அவதியடைந்துள்ளனர். நள்ளிரவு முதல் நீடிக்கும் மின்தடையால் புறநோயாளிகள்,உள்நோயாளிகள் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர். மின்சாரம் இல்லாததால் அறை கதவுகளை திறந்துவைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர் மருத்துவர்கள். சித்தா, காசநோய் புற்றுநோய் பிரிவிலும் மின்தடையால் நோயாளிகள் , மருத்துவ பணியாளர்கள் அவதி அடைந்துள்ளனர்.
