சென்னை எத்திராஜ் கல்லூரி அருகேயுள்ள ஒரு குடியிருப்பின் பின்புறத்தில், தரைக்கு கீழே கான்கிரீட் பிளவுகளை தோண்டி 39 நல்ல பாம்பு முட்டைகளை வனத்துறை அதிகாரிகள் மீட்டெடுத்துள்ளனர். அதில் 19 நல்ல பாம்பு குட்டிகள் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், மீதமுள்ள குட்டிகளையும் கண்டறியும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 10 நாட்களுக்கு முன்பு அதே வீட்டில் பிடிக்கப்பட்ட பெண் நல்ல பாம்பின் குட்டிகளே இவை என தெரியவந்துள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
