தவெக MLA கருப்பையா ஜல்லிக்கட்டு குறித்து அண்மையில் பேசிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அலங்காநல்லூரில் அதிமுக சார்பில் இன்று (செப்.3) போராட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அக்கட்சியின் Ex.அமைச்சர் செல்லூர் ராஜு, “என்றைக்கு GenZ தலைவர் என்று சொல்லி ஆட்சி மாற்றம் வந்ததோ, அன்றிலிருந்தே வெயில் கொளுத்துகிறது; இவர்கள் ஜாக்பாட்டில் அமைத்த மைனாரிட்டி ஆட்சி இது” என்று சாடினார். மேலும், படையப்பா பட பாணியில் “சட்டை எங்களது, மாப்ள அவங்க” என்பது போல தற்போதைய அரசு செயல்பட்டு வருகிறது என்று அவர் கூறினார்.
