தமிழ்நாட்டில் தொடர்ந்து கொலை, கொள்ள சம்பவங்கள் நடந்து வருவதாக சட்டப்பேரவையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “திருட்டு சம்பவங்களால் விவசாயிகள் அவதிபட்டு வருகிறார்கள். கடந்த 2 நாட்களுக்கு முன்பு, எனது தோட்டத்தில் உள்ள மின் மோட்டருக்கு பயன்படுத்தப்படும் மின் ஒயர்களை சிலர் திருடிவிட்டுச் சென்றுள்ளனர்” என்றார். மேலும், “எனக்கே இந்த நிலை என்றால் மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்” என்றார்.
