நெல்லை பாபநாசம் அணையில் இருந்து தூத்துக்குடி மாவட்ட கடைமடை குளங்களுக்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் இன்று (செப்.4) போராட்டத்தில் ஈடுபட்டனர். 5,000 ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழை மரங்கள் தண்ணீரின்றி கருகும் நிலையில் உள்ளதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர். தூத்துக்குடி-நெல்லை 4 வழிச்சாலையில் படுத்தும், கருகிய வாழை மரங்களை சாலையில் வீசியும் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்து மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.
