தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் அமர்ந்து வருந்துவதால் முதல்வர் விஜய்க்கு தூக்கம் வருவதில்லை என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறினார். சென்னை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் போராட்டம் நடத்திவரும் தூய்மைப் பணியாளர்களை இன்று (செப்.3) சந்தித்தபோது பேசிய அவர், திமுக ஆட்சியின்போது போராடிய தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர். தற்போதைய முதல்வர் விஜய் ஒருவர் மீதும் கை வைக்க கூடாது என கூறியதாக தெரிவித்தார். மேலும், தவெக ஆட்சி அமைத்து 100 நாட்களே ஆவதால், தங்களுக்கு அவகாசம் தருமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
