சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் கருத்துக்கு திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அவைக்குள் இல்லாதவர்கள் பற்றி பேசக்கூடாது என்று விதி இருக்கிறது என்று எம்.எல்.ஏ. எ.வ.வேலு கூறியுள்ளார். அமலாக்கத்துறை குற்றச்சாட்டை விஜய் படித்துள்ளார். ஆதாரம் இல்லை என சர்க்காரியா கமிஷனே கூறியுள்ளது. இந்தியாவுக்கே பெருமை சேர்த்தவர் முரசொலி மாறன். முதல்வர் விஜயின் கலைப்பயணம் முரசொலி மாறன் குடும்பத்துடன் இணைந்தது என்று அவர் கூறியுள்ளார்.
