மணல் ஏற்றிவந்த டிராக்டர் மோதி அதிமுக முன்னாள் நிர்வாகி உயிரிழந்தை நிலையில், மணல் திருட்டை தட்டிக் கேட்டதால் கொலை எனக் கூறி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவர் நேற்று டிராக்டர் மோதி உயிரிழந்தார். காவல் நிலையம் முன்பு திரண்ட உறவினர்கள், பொதுமக்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மணல் திருட்டுக்காக கொலை நடந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
