மதுரை: வாடிப்பட்டி அருகே நாளை திருமணம் நடைபெற இருந்த நிலையில் கார் மோதி மணப்பெண் மரிய வெல்சியா (26) மணமகனின் கண் முன்னே உயிரிழந்தார். செவிலியர் தேர்வு எழுதுவதற்காக மணப்பெண் வெல்சியாவை பைக்கில் ஏற்றிக் கொண்டு சென்றபோது, கார் ஒன்றின் டயர் வெடித்து பைக்கின் மீது மோதியுள்ளது. மணமகன் ஜெப பாஸ்டின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
