தொடர் விடுமுறையை முன்னிட்டுச் சொந்த ஊர்களுக்குச் செல்ல சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் குவிந்துள்ளனர். போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்ட போதிலும் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலைமோதுகிறது. இதனால் தாம்பரம், பெருங்களத்தூர் மற்றும் ஜிஎஸ்டி சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் மிக மெதுவாக ஊர்ந்து செல்கின்றன; போக்குவரத்து போலீஸார் நெரிசலைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
