நடைபெறவுள்ள இடைத்தேர்தல் குறித்து அவசர மாநிலக் குழுவைக் கூட்டி இறுதி முடிவு எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். திருச்சியில் நாளை காலை நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் முக்கிய அரசியல் நகர்வுகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகவும், நாளை மதியம் 2 மணிக்கு கட்சியின் அதிகாரப்பூர்வ முடிவு அறிவிக்கப்படும் என்றும் அவர் பேட்டியளித்துள்ளார்.
