திமுகவுக்கு டெபாசிட் கிடைக்காது எனக் கூறிய அமைச்சர் நிர்மல்குமாருக்கு, மதுராந்தகம் இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் பரந்தாமன் கடும் பதிலடி கொடுத்துள்ளார். பல கட்சிகளால் விரட்டப்பட்டு உசிலம்பட்டியிலிருந்து ஓடிய நிர்மல்குமாருக்கு திமுகவை விமர்சிக்க அருகதை இல்லை என்றும், பிற கட்சி எம்.எல்.ஏ.க்களை வளைத்ததால்தான் இந்த இடைத்தேர்தலே நடக்கிறது என்றும் சாடியுள்ளார். மேலும், தமிழக மின்வெட்டால் இனிவரும் தேர்தல்களில் தவெக தோற்க இவரே முக்கியக் காரணமாக இருப்பார் எனவும் பதிவிட்டுள்ளார்.
