விநாயகர் சதுர்த்தியையொட்டி, நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தடைகளை அகற்றும் கணபதியின் புனித வழிபாடும் தரிசனமும் அனைவரின் வாழ்விலும் புதிய ஊக்கத்தை அளித்து, மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளையும் வெற்றியடைய செய்யட்டும் என்று அவர் கூறியுள்ளார். மேலும், பிள்ளையாரின் அருளால் நமது நாடு தொடர்ந்து முன்னேற்ற பாதையில் பயணிக்க பிரார்த்திப்பதாகவும், பக்தர்களின் துயரங்களை போக்கி அரக்கர்களை அழிக்கும் விநாயக பெருமானை போற்றி வணங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.
