கன்னியாகுமரியில் உள்ள குளச்சல் காவல் நிலையத்தில் தகவல் பதிவு உதவியாளராக பணியாற்றி வரும் நிறைமாத கர்ப்பிணியான ஜாசிகா என்பவருக்கு, காவல் நிலையத்திலேயே சக காவலர்கள் சீர்வரிசைகளுடன் வளைகாப்பு நடத்தி நெகிழ வைத்துள்ளனர். விபத்தில் உயிரிழந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரின் மகளான இவருக்கு, சக போலீஸாரே உறவினர்களாக மாறி பாரம்பரிய முறையில் அறுசுவை உணவளித்து வளைகாப்பு நடத்தி மடிப்பண்டம் வழங்கி சிறப்பித்தனர்.
காவல் நிலையத்தில் நிறைமாத கர்ப்பிணிக்கு வளைகாப்பு-நெகிழ்ச்சி
