தலைநகர் சென்னையில் புதிய தலைமைச் செயலகக் கட்டடம் அமைப்பது தொடர்பான அறிவிப்புகள் மற்றும் திட்டமிடல்கள் குறித்த விவாதங்கள் அரசியல் களத்தில் தீவிரமடைந்து வருகின்றன. குறிப்பாக, பட்டினப்பாக்கம் பகுதியைப் புதிய நிர்வாக மையமாகத் தேர்வு செய்வது குறித்து வெளியாகும் தகவல்கள், அப்பகுதி பொதுமக்கள், மீனவப் பிரதிநிதிகள் மற்றும் எதிர்க் கட்சியினர் மத்தியில் பல்வேறு கவலைகளையும் எதிர்ப்புகளையும் கிளப்பியுள்ளன.
இந்தநிலையில் சென்னை பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கூடாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்துள்ளார். பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைந்தால் 9 கிராம மீனவர்கள் பாதிக்கப்படுவர். பட்டினப்பாக்கம் சுற்றுவட்டாரத்தில் ஏராளமான பள்ளிகள் உள்ளன எனவே, தலைமைச் செயலகம் அமைந்தால் வாகன போக்குவரத்து முற்றிலும் முடங்கி விடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
