தந்தை பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்குத் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா மற்றும் சபாநாயகர் பிரபாகர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் அரசு உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு பெரியாரின் சமூகநீதி சிந்தனைகளைப் போற்றும் வகையில் மலரஞ்சலி செலுத்தினர்.
