“முதலமைச்சர் வெளிநாடு செல்வதற்கு முன்பும், சென்று திரும்பிய பிறகும் ஏன் பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை” என முன்னாள் அமைச்சர் டிஆர்பி ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஸ்டாலினின் வெளிநாட்டு பயணத்தின்போது உடனுக்குடன் தகவல்கள் வழங்கப்பட்டது. வெற்றி முதலீட்டாளர் மாநாடு என்ற பெயரில் வெற்று முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் ஈர்க்கப்பட்ட முதலீடுகளையும் தவெக அரசு தாங்கள் கொண்டு வந்ததாகக் கூறுகிறது” என்றார்.
