பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணம் கோஹட் நகரில் உள்ள மாவட்ட போலீஸ் தலைமையக வளாகத்தில் மசூதி அமைந்துள்ளது. வெள்ளிக்கிழமை தொழுகையின்போது வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட வாகனம் கட்டிடத்தின் மீது மோதி வெடித்தது. தொடர்ந்து பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. பலியானவர்களில் 16 பேர் போலீசார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
