Skip to content

வேதாரண்யம் அடுத்த கோடியக்கரைக்கு நீரிலும் நிலத்திலும் செல்லக்கூடிய ரோவர்கிராப்ட் ரோந்து கப்பல் வருகை..

  • by Authour

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரைக்கு கடலோர காவல்படைக்கு சொந்தமான ரோவர் கிராப்ட் கப்பல் வந்துள்ளது கடலிலும் நிலத்திலும் ரோந்து பணியை மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கப்பல் ராமேஸ்வரத்திலிருந்து கோடியக்கரை வரை வழக்கமாக ரோந்து பணியில் ஈடுபடும் திடீரென்று கோடியக்கரைக்கு ரோவார் கிராப்ட்  கப்பல் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலை ஏராளமான பொதுமக்கள் வந்து

பார்த்து சென்றனர். இலங்கையிலிருந்து வேதாரண்யம் வழியாக தங்கம் கடத்தும் நபர்களை பிடிக்க இந்த கப்பல் வரவழைக்கப்பட்டு உள்ளதா அல்லது எல்லை தாண்டி வரும் இலங்கை மீனவர்கள் மற்றும் கடல் வழியாக ஊடுருவும் தீவிரவாதிகளை கண்காணிக்க இந்த கப்பல் வர வழைக்க வைக்கப்பட்டுள்ளதா அல்லது அல்லது

வேதாரண்யம் கடல் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த அந்த கப்பல் வந்துள்ளதா என தெரியவில்லை. இது குறித்து பாதுகாப்பு பணி கமாண்டர் விவேக்குமார் அவரிடம் கேட்ட பொழுது வழக்கமான ரோந்து பணிக்காக மட்டுமே இந்த கப்பல் வந்துள்ளதாக தெரிவித்தனர். ரோவர் கிராப்ட் கோடியக்கரைக்கு முகாமிட்டு இருப் பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று இரவில் இருந்து மீன்பிடி தடைக்காலம் அமலில் வந்துள்ள நிலையில் ரோவர் கிராப்ட் வேதாரண்யம் கோடியக்கரை பகுதியில் 10 நாட்களுக்கு நிறுத்தப்பட்டிருப்பது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!