Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் பிஷப் சாலமன் கல்லூரி….புதிய வகுப்பறைகள்….திருச்சி பிஷப் திறந்துவைத்தார்

கரூர் மாநகரின் மையப்பகுதியில் தென்னிந்திய திருச்சபையின் பிஷப் சாலமன் துரைசாமி கலை, அறிவியல் கல்லூரி கடந்தாண்டு துவங்கப்பட்டு கரூர் மாநகரை சுற்றியுள்ள ஊர்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பலர் பயின்று வருகின்றனர். இரண்டாம் ஆண்டில் அடியை எடுத்து வைத்துள்ள கல்லூரியில் பிகாம், பிகாம் சிஏ, பிசிஏ, பிபிஏ படிப்புகளுக்கான வகுப்பறைகளை கொண்ட புதிய கட்டிட

திறப்பு விழாவானது இன்று நடைபெற்றது. இதில் தென்னிந்திய திருச்சபையின் திருச்சி – தஞ்சை திருமண்டல பேராயர் சந்திரசேகரன் மற்றும் அவரது துணைவியார் ரோஸ்லின் சந்திரசேகர் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி, ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் உமேஷ் சாமுவேல், பேராசிரியர்கள், பாதிரியார்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!