Skip to content

இலவச தையல் பயிற்சி மையம்…. எம்எல்ஏ ஜவாஹிருல்லா திறந்து வைத்தார்..

தஞ்சை மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் சார்பில் இலவச தையல் பயிற்சி மையம் திறப்பு விழா மற்றும் பாபநாசம் சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி (2022-23) ல் மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சக்கரம் பொருத்திய விலையில்லா மோட்டார் சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைப் பெற்றது. பாபநாசம் திருப்பாலைத்துறை ஆபிதீன் மெட்ரிக்குலேஷன் பள்ளி வளாகத்தில் நடைப் பெற்ற நிகழ்ச்சிக்கு ஆளும் அறங்காவலர் காஜா முகையதீன் தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் நாசர், பாபநாசம் பேரூராட்சி மன்றத் தலைவர் பூங்குழலி முன்னிலை வகித்தனர். பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா தமது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் 13 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ 11 லட்சத்து 11 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பில் 4 சக்கரம் பொருத்திய விலையில்லா மோட்டார் சைக்கிளையும், 1 மாற்றுத்திறனாளிக்கு ஆபிதீன் அறக் கட்டளைச் சார்பில் மூன்று சக்கர

சைக்கிளையும் வழங்கியதுடன், தஞ்சை மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் சார்பில் இலவச தையல் பயிற்சி மையத்தை திறந்து வைத்து பேசினார். இதில் சிங்கப்பூர் கல்வியாளர் நசீர் கனி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன், மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் கௌரவ செயலாளர் முஹம்மது ரபீ, செயலாளர் ரபீக் தீன், எம்.எல்.ஏ பி.ஏ முஹம்மது ரிபாயி,‌ஆபிதீன் மெட்ரிக்குலேசன் பள்ளி சித்தார்த்தன், பள்ளி ஆசிரியர்கள், பாபநாசம் ஜமாத் தலைவர் முகம்மது பாரூக், துணைத் தலைவர் ஹாஜா மைதீன், மாணவர்கள், பொதுமக்கள் உட்பட கலந்துக் கொண்டனர். முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் ஒருங்கிணைப்பாளர் சாப்ஜான் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!