Skip to content

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 14 ஜோடிகளுக்கு இலவச திருமணம்…

  • by Authour

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 14 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்றது.

2023 -24 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் அறிவிப்பின் படி பொருளாதாரத்தில் பின் தங்கிய திருமண மணமக்களுக்கு திருக்கோயில் சார்பாக 4 கிராம் பொன்தாலி ரூ. ஐம்பதாயிரம் மதிப்புள்ள சீர் வரிசைகள் வழங்கி திருமண விழா நடத்தப்பட்டு வருகிறது. கடந்தாண்டில் 500 திருமண ஜோடிகளுக்கு திருக்கோயில் சார்பாக திருமண நடத்தி வைக்கப்பட்டது. இந்த ஆண்டு கூடுதலாக மேலும் 100 திருமண மணமக்களை சேர்த்து ஒரு மண்டலத்திற்கு 30 திருமண ஜோடிகள் வீதம் 600 திருமண ஜோடிகளுக்கு திருக்கோயில்கள் சார்பாக திருமண விழா நடத்தி வைக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரால் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்து சமய அறநிலை துறை அமைச்சர் அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் முதல் கட்டமாக கடந்த ஜூலை மாதம் ஏழாம் தேதி 10 ஏழை, எளிய தகுதியுள்ள திருமண ஜோடிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிலையில் திருச்சி இணை ஆணையர் மண்டலத்துக்கு உட்பட்ட திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 14 ஜோடிகளுக்கு திருச்சி, சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் இன்று நடைபெற்ற திருமண நிகழ்வினை

நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி திருமணங்களை நடத்தி வைத்தார். மணமக்களுக்கு 4 கிராம் தாலி தங்கம் மற்றும் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள திருமணத்திற்கு வழங்கும் அனைத்து சீர்வரிசைப் பொருட்களும், வழங்கினர். இந்நிகழ்வில் மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் கோயில் இணை

ஆனையர் கல்யாணி, கோயில் பணியாளர்கள், மணமக்களின் உறவினர்கள், அரசு அலுவலர்கள், திமுக பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திருமணத்தில் கலந்து கொண்ட உறவினர்களுக்கு கோயில் சார்பாக திருமண விருந்து வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!