குழந்தைகளுடன் படம் பார்க்க வந்த பெற்றோரால் அமைந்தகரை மாலில் திரையிடப்பட்ட `ஜனநாயகன்’ தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
ஆம்பா மாலில் உள்ள பிவிஆர் சினிமாஸில் காலை 9:25 மணிக் காட்சி திடீரென பாதியில் நிறுத்தப்பட்டது. படம் பார்க்க நேற்று பெற்றோர் குழந்தைகளுடன் வந்ததால் சர்ச்சையாகி சமூக வலைதளத்தில் வீடியோ வைரலானது. இன்றும் பல குடும்பத்தினர், குழந்தைகளை படம் பார்க்க அழைத்துவந்ததாக செய்தி வெளியானது. இதனையடுத்து தியேட்டருக்கு திடீரென வந்த காவல்துறையினர், படத்தை பாதியில் நிறுத்திவிட்டு, குழந்தைகளுடன் வந்த பெற்றோர்களை வெளியேற்றினர். அவர்களை வெளியேற்றிய பின் ஜனநாயகன் படம் மீண்டும் திரையிடப்பட்டது. சுமார் ஒரு மணிநேரம் திரைப்படம் நிறுத்தப்பட்டதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர்.
