Skip to content

தான்சானியா அதிபர் சமியா….4 நாள் பயணமாக இந்தியா வந்தார்

தான்சானியா அதிபர் சமியா சுலுஹு ஹசன் 4 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். தனி விமானம் மூலம் நேற்று மாலை டில்லி வந்த சமியாவை மத்திய மந்திரிஅன்னபூர்ணதேவி வரவேற்றார்.
அதிபர் சமியா இன்று காலை ஜனாதிபதி மாளிகை வந்தார். அவருக்கு அரசு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. தான்சானியா அதிபர் சமியாவை  ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி வரவேற்றனர். இதனை தொடர்ந்து இந்தியா – தான்சானியா இடையேயான உறவை மேம்படுத்துவது,வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து அதிபர் சமியா, பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளனர். தான்சானியா அதிபர் சமியாவுக்கு இன்று மாலை ஜனாதிபதி முர்மு விருந்து அளிக்க உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!