புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுக்கா , தென்னலூர் கிராமத்தில் நடைபெற்ற தாட்கோ திட்ட விழிப்புணர்வு முகாமில், தொழில் முனைவோர் திட்டத்தில் தாட்கோ மானியத்தில் வாங்கப்பட்ட சுற்றுலா வாகனத்தினை தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (தாட்கோ) மேலாண்மை இயக்குநர் கே.எஸ். கந்தசாமி, மாவட்ட கலெக்டர் கவிதா ஆகியோர் இன்று வழங்கினார்கள். மேலும் இளைஞர்களுக்கான
சுயவேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பால்மாடு வாங்குவதற்கான தாட்கோ மானிய தொகையும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் புதுக்கோட்டை வடக்குமாவட்ட இலக்கிய அணி துணைச்செயலாளர் , தென்னூர் பழனியப்பன் பங்கேற்றார்.