மூணார் கன்னிமலை பகுதியில் இன்று (செப்.4) காலை பரபரப்பான சம்பவம் நடைபெற்றது. அப்பகுதியில் சென்றுகொண்டிருந்த நபரை யானை ஒன்று திடீரென வேகமாக துரத்தியது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், யானையிடம் சிக்காமல் ஓடி தப்பினார். யானை மிக அருகில் வரை துரத்தி வந்த நிலையில், நொடியில் சுதாரித்துக்கொண்டதால் அந்த நபர் நூலிழையில் உயிர் தப்பினார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
