சென்னை அடுத்த போரூர் ஏரியில் மீனவர்கள் சிலர் மீன் பிடித்து கொண்டிருந்தனர் .அப்போது மீனுக்காக வீசிய வலையில் திடீரென உடல் அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று சிக்கி உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போரூர் போலீசார் உடல் அழகிய நிலையில் கிடந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
உடல் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட நபர் அடையாளம் தெரியாத 40 வயது மதிக்கத்தக்க ஆண் என காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது ..
பிணமாக கிடந்தவர் கொலை செய்யப்பட்டாரா, தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.