Skip to content
Home » டோனி வீட்டில் ரெய்னாவுக்கு விருந்து…..

டோனி வீட்டில் ரெய்னாவுக்கு விருந்து…..

  • by Senthil

இந்திய அணியின் கேப்டனாக டோனிசெயல்பட்ட போது, அணியின் தவிர்க்க முடியாத வீரராக ரெய்னா விளையாடினார். பல்வேறு போட்டிகளில் இந்திய அணியின் வெற்றிக்கு ரெய்னா காரணமாக இருந்துள்ளார்.

அதேபோல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக டோனி தலைமையில் பல ஆண்டுகள் துணைக் கேப்டனாக விளையாடியுள்ள ரெய்னா, ஐபிஎல் தொடரில் பல சாதனைகளை படைத்துள்ளார். விளையாட்டை தவிர்த்து தனிப்பட்ட வாழ்க்கையில்  டோனியும், ரெய்னாவும் மிக நெருக்கமான நண்பர்களாக இருந்தனர். இருவரும் இந்திய அணியிலிருந்து ஒரே நாளில் ஓய்வும் பெற்றனர்.

இதற்கிடையே, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாகவும், இதன்காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரெய்னாவை ஒப்பந்தம் மேற்கொள்ளவில்லை என்றும் தகவல்கள் பரவின. கடந்த ஐபிஎல் சீசனில் வர்ணனையாளராக செயல்பட்ட ரெய்னா டோனியை சந்தித்துப் பேசி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்த நிலையில், ராஞ்சியில் உள்ள டோனியின் இல்லத்துக்கு நேரில் சென்ற ரெய்னா அவரை சந்தித்துப் பேசினார்.  அங்கு விருந்து  சாப்பிட்டார். அப்போது டோனி அவரது மனைவி சாக்‌ஷியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ரெய்னா, இரவு விருந்துக்கு நன்றி எனப் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!