தூத்துக்குடி அருகே வெள்ளப்பட்டி தேவாலயத்தில் கட்டுமான பணியின் போது மேற்கூரை இடிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. கட்டிட இடிபாடுகளில் சிக்கிய 20 பேரில் 10 தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். காயமடைந்த 10 பேர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கட்டிட இடிபாடுகளில் சிக்கிய மேலும் 10 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி அருகே கட்டுமான பணியின் போது விபத்து- 10 பேர் மீட்பு
