தேனி – திண்டுக்கல் மாவட்ட எல்லையான தேவதானப்பட்டி அருகே கார் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. காரில் பயணம் செய்த எர்ணாகுளத்தை சேர்ந்த தம்பிராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்த இருவருக்கு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
